போலி பாஸ்போர்ட்டில் இருந்த நடிகை ஐஸ்வர்யா ராய்..!(Actress Aishwarya Rai’s photo in fake passport)
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்த மூன்று வெளிநாட்டவர்கள் கைது செய்யப்படுள்ளனர்.
சுமார் 1.81 கோடி பண மோசடி செய்ததாக ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
போலீசார் வேட்டையில் சிக்கிய மூவரிடம் இருந்து போலி பாஸ்போர்ட் மற்றும் ரூ.11 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. உடனே, அந்த போலி பாஸ்போர்ட் யாருடையது என்று பார்க்கையில்,
பிரபல பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராய் பச்சன் பெயரில் இருந்தது தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
