நிறுவனத்தின் முதல் வருடத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா..!(Actress Nayanthara celebrated the first year of company)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இந்த ஆண்டு ஜூன் மாதம், தன்னுடைய நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட இவர்,

திருமணத்திற்கு முன்பே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்து, சமீபத்தில் இரட்டை குழந்தைகளுக்கும் தாயானார்.

தற்போது அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை, ரெனிதா ராஜனுடன் இணைந்து துவங்கியுள்ளார். இந்த நிறுவனம் தோல் பராமரிப்பு பொருட்கள் மற்றும் லிப் பாம் போன்றவற்றை தயாரித்து வருகிறது.

இந்த நிறுவனம் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு வருடத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக தற்போது அவரது ஃபேவரட் லிப் பம்முகள் சில வற்றில் இவர் ஆட்டோகிராப்புடன் விற்பனைக்கு வருகிறதாம். அதே போல் சில சலுகைகளையும் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.