சிகிச்சைக்கு பணமில்லாமல் அந்தகால கவர்ச்சி நடிகை ஜெயக்குமாரி..!(Attractive actress Jayakumari attractive actress of that time, without money for treatment)
கவர்ச்சி நாயகியாக வலம் வந்து ரசிகர்களை வசீகரித்தவர் நடிகை ஜெயக்குமாரி. இவர் தனது 14 வயதில் தமிழ் திரையுலகில் வெளியான நாடோடி படத்தின் மூலம் அறிமுகமாகினார்.
இவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து போனதால், சிகிச்சை பெற பணம் இல்லாததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகை ஜெயக்குமாரி சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பது குறித்து அறிந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், நலம் விசாரித்து வீடு மற்றும் உதவித்தொகை வழங்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

