செய்திகள் | திரைப்படங்கள்

நாளை வரவுள்ள நானே வருவேன் படத்தின் கதை இதுதானா..?(Is this the story of Naane Varuven movie coming tomorrow)

தனுஷ் நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட படங்களில் பிசியாக இருக்கிறார். இதில் நானே வருவேன் படத்தை அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கியுள்ளார்.

படம் நாளை அதாவது 29ஆம் தேதி திரைக்கு வருகிறது. படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் கதைப்படி , தனுஷ் இரட்டை வேடத்திலும், செல்வராகவன் எதிர்மறை நாயகனாகவும் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் பரவின. அப்படி என்ன தான் படத்தின் கதை என்பதை பார்க்கலாம். இந்த படத்தில் தனுஷ் இருட்டையர்களாக நடிக்கின்றனர். இதில் ஒருவர் சைக்கோ கில்லர் ஆக இருக்கிறார். சிறுவயதில் அவர் செய்த தப்பிற்காக பெற்றோர்கள் கண்டிக்க கோபத்தில் தனது தந்தையை கொலை செய்துவிட்டு வீட்டை விட்டு ஓடவிடுகிறார்.

இதை அடுத்து பல வருடங்கள் கழித்து பெரியவராக காண்பிக்கப்படும் தனுஷிற்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ளன. மறுபுறம் நாயகனாக இருக்கும் தனுஷ் மற்றும் அவரது குடும்பம் குறித்தும் காட்டப்படுகிறது. இதில் இரண்டு தனுஷிற்கும் இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. இதில் சைக்கோவாக இருக்கும் தனுஷ் தனது மனைவியை கொன்றுவிட்டு பிள்ளையுடன் ஒரு காட்டிற்குள் செல்கிறார்.

அங்கு வேட்டையனாக இருக்கும் செல்வராகவன் அவரது மகனை பிடித்து கட்டி வைத்து சித்திரவதை செய்கிறார். இதையடுத்து எவ்வாறு மகனை தனுஷ் காப்பாற்றுவார்?. சைக்கோவாக இருக்கும் தனுஷ் திருந்துவாரா? என்பது தான் கிளைமேக்ஸ். இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Naane Varuven movie

Similar Posts