செய்திகள் | திரை விமர்சனம்

எஸ் ஜே சூர்யாவின் ‘கடமையை செய்’எப்படி இருக்கு – திரை விமர்சனம்

எஸ் ஜே சூர்யாவின் நடிப்பில் ‘கடமையை செய்’ படம் எப்படி இருக்கிறது வாங்க பார்க்கலாம்.

படக்குழு

இயக்கம்:

வெங்கட் ராகவன்

தயாரிப்பு:

டி.ஆர். ரமேஷ் & எஸ். ஜாஹிர் உசேன்

வெளியீடு:

சிம்பு சினி ஆர்ட்ஸ்

முக்கிய கதாபாத்திரங்கள்:

எஸ்.ஜே. சூர்யா, யாஷிகா ஆனந்த்,ராஜேந்திரன்,சார்லஸ் வினோத்,சேசு

இசை:

அருண் ராஜ்

படத்தின் கதை

கடமையைச் செய் படத்தில் சிவில் இன்ஜினியர் கதாபாத்திரத்தில் வரும் எஸ்.ஜே.சூர்யா தனது மனைவி யாஷிகா ஆனந்த மற்றும் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் சிவில் சந்தோஷமாக கதாபாத்திரத்தில் வரும் எஸ்.ஜே.சூர்யா ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து வரும் நிலையில் இருப்பதை கண்டுபிடிக்கிறார். இந்த விஷயத்தை தெரிந்து கொண்டு எஸ்.ஜே.சூர்யா யாரிடமும் உண்மையை சொல்லக்கூடாது என்பதற்காக அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் உரிமையாளராக இருப்பவர். எஸ்.ஜே.சூர்யாவை விபத்துக்கு உள்ளாக்கி கொல்ல முற்படுகிறார். அந்த விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைக்கும் எஸ்.ஜே.சூர்யா ஒரு வித்தியாசமான கோமா நிலைக்கு செல்கிறார்.

படத்தின் இரண்டாம் பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா இந்த கோமா நிலையில் அவரின் நடிப்புகள் பாராட்டும் வண்ணமே உள்ளது. இந்நிலையில் விபத்துக்கு உள்ளான எஸ்.ஜே.சூர்யா கோமா நிலையில் இருக்கும்போது என்னென்ன நடக்கிறது என்பதை கவனிக்கவும், பார்க்கவும் இயலும் ஆனால் அவரால் சாதாரணமாக எழுந்து நடக்கவும், கை கால்களை பெரிதாக அசைக்கவும, வாய் பேசவும் முடியாது.

இந்த நிலையில் இருக்கும் எஸ்.ஜே.சூர்யா கட்டிடத்தின் உண்மையை பற்றி தன் மனைவி யாஷிகா ஆனந்த் மூலமாக வெளி கொண்டு வருகிறார் எப்படி அனைவரையும் காப்பாற்றுகிறார் என்று வருகிறார் வித்தியாசமான கதைகளுடன் இருக்கிறது. மொட்டை ராஜேந்திரனின் நகைச்சுவை காட்சிகள் நமக்கு அங்கங்கு குபீர் சிரிப்புகளை வர வைத்தாலும் பெரும்பாலான இடங்களில் காமெடி சீன்கள் அந்தளவு எடுபடவில்லை.

வில்லனாக வருபவரின் நடிப்பும் பெரிதாக சொல்லும் படி இல்லை. வில்லனின் தம்பியாக வருபவர் அவரின் வில்லத்தனமான நடிப்பில் பின்னி எடுத்துள்ளார் மேலும் அவர் பேசும் வசனம் எடுத்துள்ளார் கடவுள் செடி, கொடிகள், விலங்குகள் போன்றவற்றில் சிலதுகளுக்கு விஷத்தன்மை வாய்ந்ததாக வைத்திருப்பது போன்று மனிதர்களுக்கும் சில மனிதர்களுக்குள் விஷத்தன்மை வாய்ந்த மனிதர்களாக படைத்திருக்கிறார் அது நான் தான் ” என்று விஷத்தன்மையுடன் அவர் பேசும் வசனங்கள் அனைத்தும் பாராட்டுக் உரியது. யாஷிகா ஆனந்த் அங்கங்கே கவர்ச்சியாக நடித்திருந்தாலும் எப்பொழுதும் போல் இல்லாமல் இந்த படத்தில் நன்றாகவே நடித்துள்ளார். படத்தின் கதைக்களம் நன்றாக இருந்தாலும் டெக்னிக்கலாக அங்கங்கே குறைகள் இருக்கிறது அதுமட்டுமில்லாமல் எடிட்ங்கில் சிஜே வேலை பாடுகள் மனம் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை எனவும் படம் பார்த்தவர்கள் தங்கள் விமர்சனங்களை முன் வைக்கின்றனர்

படத்தின் சிறப்பு

எஸ்.ஜே.சூர்யா அவரின் நடிப்புகள் பாராட்டும் வண்ணமே உள்ளது.யாஷிகா ஆனந்த் அங்கங்கே கவர்ச்சியாக நடித்திருந்தாலும் எப்பொழுதும் போல் இல்லாமல் இந்த படத்தில் நன்றாகவே நடித்துள்ளார்.

படத்தின் சொதப்பல்கள்

டெக்னிக்கலாக அங்கங்கே குறைகள் இருக்கிறது.எடிட்ங்கில் சிஜே வேலை பாடுகள் மனம் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை.

மதிப்பீடு: 2.75/5

இந்த படம் பார்க்கக்கூடியது

ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.

Similar Posts