மாமியார் கொடுமை தான் உனக்கு, என பதிவிட்ட தயாரிப்பாளர் ரவீந்தர்..!(Producer Ravinder posted that mother-in-law is cruel to you)
தயாரிப்பாளர் ரவீந்தர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் மஹாலக்ஷ்மி ஷூட்டிங் இருக்கிறது என சொல்லி காலையிலேயே கிளம்பி சென்றுவிட்டாராம்.
அவருக்கு புரட்டாசி 1 ஸ்பெஷலாக வெஜிடேரியன் சாப்பிடு செய்து அதை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கொண்டு சென்று இருக்கிறார் ரவீந்தர்.
“சண்டே family time என எல்லோரும்சொல்கிறார்கள். ஆனால் எனக்கு துரதிஷ்டவசமாக வேறு விதமாக இருக்கிறது. அன்பே வா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நான் சாப்பாடு எடுத்து செல்லும் டன்ஸோ டெலிவரி பாய் ஆகிவிட்டேன்.”
“பொண்டாட்டி மஹாலக்ஷ்மி ஷங்கர்.. எல்லா பாத்திரத்தையும் வீட்டுக்கு திருப்பி கொண்டுவந்துவிடு. இல்லை என்றால் மாமியார் கொடுமை மட்டுமின்றி.. அம்மா என்னையும் டன்ஸோவில் சேர வைத்துவிடுவார்” என ரவீந்தர் தெரிவித்து இருக்கிறார்.
