ரஜினியின் மகள் தான் காரணம், பேட்டியில் தேவயாணி கணவர்..!(Rajini’s daughter is the reason, Devayani’s husband in the interview)
தனது க்யூட் நடிப்பால் ரசிகர்களை கொள்ளை கொண்ட இவர் தமிழ் மட்டுமல்லாமல் பெங்காலி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்துள்ளார் நடிகை தேவயாணி .
தேவயாணி சூரியவம்சம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ராஜகுமாரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி 21 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் தேவயாணியின் தம்பியும் நடிகருமான நகுல் அவரிடம் தற்போது வரை பேசாமல் இருக்கிறாராம். சமீபத்திய பேட்டி ஒன்றில் ராஜகுமாரன்,
அதாவது நகுல் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி நடத்தி வரும் லதாவின் பள்ளியில் தான் படித்ததாகவும், ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யாவும் சௌந்தர்யாவும் நகுலின் நெருங்கிய நண்பர்கள் என்று தெரிவித்தார்.
தேவயாணி என்னை திருமணம் செய்த போது ரஜினியின் மகள்கள் நகுலை கிண்டல் செய்திருக்க கூடும். அதனை அவமானமாக எண்ணி தான் நகுல் இன்னமும் தன்னிடம் பேசாமல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
