வெற்றிமாறனின் விடுதலை படம் பார்த்த பிறகு சீமான் பேட்டி அளித்துள்ளார். | Seeman has given an interview after watching Vetrimaaran’s Viduthalai movie
ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாக் கொண்டும் இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார். முதல் பாகம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தினை பார்த்த பிறகு இயக்குனரும், நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான், பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது பேசிய இயக்குனர் சீமான், “இந்த படத்தை தயவுசெய்து பாருங்கள். சூரி உங்கள் கண்ணை விட்டு போக மாட்டார். இந்த படத்திற்கு கடுமையான உழைப்பு வெற்றிமாறன் உடையது. இது வரலாற்றில் பெரும் படைப்பு. இந்த படத்திற்கு உறுதுணையாக இருந்தது ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் & இசைஞானி இளையராஜா. நடிகர் சூரியின் நடிப்பில் முன்னர் இருந்த நகைச்சுவை நடிகரை பார்க்க முடியாது. படம் பார்த்த பிறகு எதுவும் பேச முடியாது. அசுரன் படம் பார்த்த பிறகு இருந்த தாக்கம் இந்த படத்தில் 10-20 அசுரன் படத்தின் தாக்கம் உண்டு. விடுதலை இரண்டாம் பாகம் வரும் போது மிகப்பெரிய படைப்பாக இருக்கும்.” என சீமான் பேசியுள்ளார்.