இது என்ன நியாயம் சொன்னதை செய்யாத விஷால்…!
விஷாலின் படங்களின் உரிமையை லைகா எடுப்பதற்காக பிரபல பைனான்சியர் அன்புசெழியனிடம் வாங்கிய ரூ.21.29 கோடி கடனை லைகா நிறுவனம் செலுத்தியது.
ஆனால் வீரமே வாகை சூடும் படத்தை வெளியிட விஷால் முயற்சி செய்தார். இதை எதிர்த்து லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
விசாரித்த நீதிமன்றம், விஷால் ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட்டது. ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. ஆனால், ஆறு மாதத்திற்கு கூட பணத்தை தர முடியாது என விஷால் தெரிவித்துள்ளார்.
விஷால் பொய் சொல்கிறார் என்று கூறிய லைகா நிறுவனம், விஷாலின் சொத்து விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டது.
