அம்மா மூலம் தூது அனுப்பிய மகள், ஏற்றுக்கொள்வாரா நடிகர் ராஜ்கிரண்..!(Will actor Rajkiran accepts the daughter who sent a message through her mother)
நடிகர் ராஜ்கிரண் ஜீனத் பிரியா என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்து வந்தார். ஆனால் இவர் சமீபத்தில் சீரியல் நடிகரான முனீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணத்திற்கு ராஜ்கிரண் சம்மதிக்கவில்லை. பின்பு ராஜ்கிரண் ஒரு அறிக்கையாகவே வெளியிட்டு இருந்தார். அதாவது இவர்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் தற்போது தன்னுடைய வளர்ப்பு தாயிடம் தஞ்சமடைந்துள்ளதாகவும் ,எப்படியாவது அப்பாவிடம் பேசி சம்மதிக்க வையுங்கள் என்று பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் ராஜ்கிரண் மனைவிய அவர்களுக்காக தூது சென்றார். கடும் கோபத்துடன் இருக்கும் ராஜ்கிரண் தனது மனைவியின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து மகளை ஏற்றுக் கொள்வாரா என்பது தெரியவில்லை.

கூடிய விரைவில் தன் மகளின் திருமணத்தை ஏற்றுக் கொண்டு விட்டதாக அவர் கூறுவதற்கும் வாய்ப்புள்ளது என்று பலரும் பேசி வருகின்றனர்.